Pages

Monday, March 15, 2010

இரவு எரிந்து கொண்டிருக்கிறது...

இரவு எரிந்து கொண்டிருக்கிறது...

கனடா கலை இலக்கியத் தொகுப்பு வெளியீடும்,கலாபூசணம் செ.டானியலின் இயக்கதில் வெளிவந்த ‘புனிதவதி’ (தென்மோடிக் கூத்து) ஒளிப் பேழைக் காட்சியும்.
கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதியினர்.







கூர்-2010தொகுப்பு வெளியீடும்,கலாபூசணம் செ.டானியலின் இயக்கதில் வெளிவந்த ‘புனிதவதி’ (தென்மோடிக் கூத்து) ஒளிப் பேழைக் காட்சியும்.





Sunday, March 07, 2010

டானியல் அன்ரனி

-சசி கிருஷ்ணமூர்த்தி-

வலை’ எறிந்தும் ‘சமர்’ புரிந்தும் கடந்த கால் நூற்றாண்டுகளாக ஈழத்து இலக்கியத்தோடு பரிச்சயம் கொண்டிருந்த டானியல் அன்ரனி என்ற படைப்பாளி யாரும் எதிர்பாராத வகையில் அண்மையில் காலமானார். அப்போது அவருக்கு வயது 47.
கலை இலக்கிய முயற்சிகள் அனைத்தும் ஓர் புதிய வாழ்கைக்கான மாபெரும் போராட்;ட த்தின் ஒரு பகுதி என்பதில் நம்பிக்கை கொண்ட டானியல் அன்ரனி, அந்த நம்பிக்கையை தனது படைப்புக்களில் வெளிப்படுத்தும் வாழ்வுக்கு விசுவாசமாகவும் இருந்தவர். எழுத்தாள னாக, பத்திரிகை ஆசிரியனாக, விமர்சகனாக இயங்கி வந்த இவரிடம் ஈழத்து இலக்கிய உலகம் இன்னும் எதிர்பார்த்திருந்த வேளையில் தான் இந்த அதிர்ச்சி தரும் நிகழ்வு நடந்திருக்கிறது.
ஆரம்பத்தில் எழுத வேண்டும் என்ற ஆவல் உந்த, மிகச் சாதாரண சிறுகதைகளை ராதா, சிந்தாமணி, சுந்தரி போன்ற பத்திரிகைகளில் எழுதி வந்த டானியல் அன்ரனி காலப்போக்கில் முற்போக்கு இலக்கியத்தின் தாக்கத்தினாலும், நல்ல இலக்கியங்களில் ஏற்பட்ட பரிச்சயம் காரணமாகவும் சமூகப் பார்வையோடு கூடிய சிறுகதைகளை எழுதத் தொடங்கினார். பொதுவாக தான் வாழ்ந்த கடல் சார்ந்த மக்களின் வாழ்வை அந்த வாழ்வில் அவதானித் த முரண்பாடுகளை அவரது சிறுகதைகள் வெளிப்படுத்தின. மல்லிகை,வீரகேசரி,சிரித்திரன், கணையாழி போன்ற பத்திரிகைகளில் இவை பெரும்பாலும் வெளிவந்தன. கலைத்துவ நோக்கில் இச்சிறுகதைகளில் சில நெருடல்கள் இருந்தாலும் அவை புறந்தள்ளக் கூடிய வை அல்ல.
டானியல் அன்ரனி பற்றிய இந்த அஞ்சலிக் குறிப்பை எழுதும் போது அவர் இலக்கியப் பயணம் தொடங்கிய காலத்தில் அவரோடு பயணித்த அனுபவம் செஞ்சில் நிழலாடுகின்ற து. வாழ்வின் சுமையறியாத காலத்தில், இலக்கியக் கனவுகளுடனும், தேடலுடனும் கழி ந்த நாட்கள் டானியல் அன்ரனியை நினைவு கூரக்கூடியன.
‘சிரித்திரன்’ காரியாலயம் அப்போது நாவலர் வீதியில், மனோகராத் தியேட்டருக்கு அரு கில் இருந்தது. அதற்கு அருகில் தான் ராதேயன் வீடும். ராதேயன் வீட்டிற்கு அப்போது பல இலக்கிய நண்பர்கள் வந்து போவார்கள். சிறுகதைகள் எழுதி வந்த டானியல் அன்ர னியையும், கவிதைகள் எழுதி வந்த பாலகிரியையும் இங்கே தான் சந்திக்க முடிந்தது. சிரித்திரன் காரியாலயத்தில் சுந்தரின் பத்திரிகைக் கலை அனுபவங்களும்,ராதேயன் வீட்டு இலக்கிய நண்பர்களின் சந்திப்பும் அன்றைய மாலை வேளைகளை அர்த்தமாக்கின.
அப்போது காணப்பட்ட வியட்நாம் போரின் உணர்வுகளும், யாழ்ப்பாணத்தில் சாதிப் போரா ட்டத்தின் தாக்கமும், மாஓவின் புகழோங்கிய நிலையும், முற்போக்கு இலக்கியத்தின் உர த்த குரலும் எங்களைப் பாதிக்கத் தவறவில்லை. சமூகமாற்றம், சோசலிஷம் ஆகியவற் றைப் புரிந்து கொள்வதற்கும், அதனை அடைவதற்கும் கலை இலக்கியங்களின் பங்குப் பணியில் பெரிதும் ஆர்வம் கொண்டவர்களாக இருந்தோம். இந்த ஆர்வம் எமது கலை இலக்கிய ஈடுபாட்டை மென்மேலும் விசாலிக்கச் செய்தது.
சமூக நோக்குடைய நல்ல இலக்கியங்களைத் தேடிப் படிப்பதும், நல்ல திரைப்படங்களை ரசிப்பதும் எமது தேடல்களாக இருந்தன. அப்போது தான் நாங்கள் ஏன் ஒரு இலக்கிய அமைப்பினை தோற்றுவிக்கக் கூடாதென்ற எண்ணம் எமக்கேற்பட்டது. எண்ணம் செயற்பட செம்மலர் இலக்கிய வட்டம் உருவானது. (ஏறக்குறைய 1970களாக இருக்கலாம்) இதன் உருவாக்கத்தில் ராதேயன் பாலகிரி, டானியல் அன்ரனி ஆகியோர் தான் முக்கியமானவர்கள். அதன் தலைவராக துடிப்புடன் செயற்பட்டவர் டானியல் அன்ரனி. இலக்கிய கலந்து ரையாடல், நூல் விமர்சனம் என அடிக்கடி நடைபெறும். இவ்விலக்கிய வட்டத்தின் செய ற்பாடுகள் பரவலாகத் தெரிய வரலாயிற்று. அப்பொழுது இலக்கியப் பயணத்தை மேற்கொ ண்டிருந்த பலரும் இவ்வட்டத்துடன் நெருக்கமுறலாயினர். வ.ஜ.ச.ஜெயபாலன், நந்தினி சேவியர், பூனகர் மரியதாஸ், ஞாயிறு கையெழுத்துப் பிரதிகளுடன் கூட்டங்களுக்கு வந்து போன சேரன்,மற்றும் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் அப்போது கல்வி பயின்ற திக்குவல்லை கமால், அன்பு ஜவகர்ஷா, கலைவாதி கலீல் ஆகியோர் இவர்களுள் குறிப் பிடத்தக்கவர்கள்.
செம்மலர்கள் இலக்கிய வட்டத்தின் நடவடிக்கைகள் எமக்கு உற்சாகமூட்டவே, நமது வட் டம் ஏன் ஒரு சஞ்சிகையை வெளியிடக் கூடாதென்று தீவிரமாக யோசித்தோம். அதைச் செயல்படுத்தவும் முனைந்து விட்டோம். ‘அணு’ என்ற பெயரில் ஒரு சஞ்சிகையை வெளி யிடுவதென்று முடிவாகியது. இச்சஞ்சிகையின் வேலைகள் தொடங்கிய போது தான் அதி லுள்ள நடைமுறைச் சிக்கல்கள் எங்களுக்குப் புரியத் தொடங்கின. எனினும் ஒரு இதழ் மிகவும் சிரமத்தின் மத்தியில் கொண்டு வரப்பட்டது. இதன் வெளியீட்டு விழா யாழ் பொது நூலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. ஒரு இதழுடன் நின்றிருக்க வேண்டிய ‘அணு’ டானியல் அன்ரனியின் விடா முயற்சியினால் மேலும் இரண்டு இதழ்கள் வெளிவந் தன. அதன் பின்னர் கால நகர்வில் நாங்களும் திசைக் கொருவராகச் செல்ல செம்மலர் கள் இலக்கிய வட்டமும் தன் இலக்கிய வாழ்வை முடித்துக் கொண்டது.
‘அணு’ ஏற்படுத்திய தாக்கம் தான் ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்குப் பின்னர் டானியல் அன்ரனியை ‘சமர்’ வெளியிடத் தூண்டியது. நவீன கலை இலக்கியம் மற்றும் மாக்ஸிஸ அழகியல் தான் வளர்த்துக் கொண்ட ஈடுபாட்டை வெளிப்படுத்தும் தளமாக அமைத்துக் கொண்ட ‘சமர்’ எட்டு இதழ்கள் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கவை. ஒரு தனி மனிதனைப் பொறுத்த வரையில் எட்டு இதழ்களைக் கொண்டு வந்தமை சாதனை தான். க.கைலாசப தி, சேரன், எம்.ஏ.நுஹ்மான், வ.ஜ.ச.ஜெயபாலன், முருகையன், சாந்தன், கே.எஸ்.சிவகுமா ரன், பே.சண்முகலிங்கம் ஆகியோரின் எழுத்துக்கள் ‘சமரில்’ வெளிவந்திருந்தன. ‘சமர்’ வெளிப்படுத்திய கருத்துக்கள், பார்வைகள் பல இன்று மீள் பரிசீலனைக்கு உட்படக் கூடி யன. ஆயினும் இதன் வருகை ஈழத்து சஞ்சிகை உலகில் குறிப்பிடத்தக்கது. இதை மீண் டும் கருத்து பார்வை மாற்றங்களுடன் வெளிக் கொணர வேண்டும் என்பதில் டானியல் அன்ரனிக்கு கடைசி வரையும் விருப்பம் இருந்தது. ஆனால் அந்த விருப்பம் நிறைவேறா மல் போய்விட்டது.
டானியல் அன்ரனியின் கடைசி நாட்கள் மிகவும் சோகமானவை. இன ஒடுக்கு முறையின் குரூரம் அவரையும் விட்டு வைக்கவில்லை. தொழில் பார்த்த நிறுவனம் குலைந்து போக, நிரந்தர வேலையின்மை, குடும்பப் பாரத்தின் அழுத்தம் இவற்றுக்கிடையே தான் இவரைக் கொடிய நோய் பற்றிக் கொண்டது. ஆரம்ப நிலையில் அந்த நோயின் தன்மை கண்டு பிடிக்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் அவர் மீண்டிருக்கக் கூடும். நோய் முற்றிய நிலையில் மிகவும் அச்சந் தரும் பணயத்தை மேற்கொண்டு கொழும்பு சென்றும் அவரால் மீள முடியாது போய் விட்டது.
டானியல் அன்ரனி ஒரு ‘மனிதன்’ என்ற விழிப்புடன் வாழ்க்கையை அர்த்தப்படுத்தும் உண ர்வுடன், இலக்கியத்தை நேசித்தவர். இலக்கிய உறவினரைப் பேணியவர். இலக்கியத்துக்கு அப்பாலும் சமூக சேவை, விளையாட்டுப் போன்ற தொடர்புகளின் ஊடேயும் தான் வாழ்ந்த சமூகத்துடன் உறவு கொண்டவர். அவரது வாழ்வுப் பயணம் நண்பர்களோடு முடிவடைந்து விட்டாலும் அவர் பதித்த சுவடுகள் லேசில் அழிபட்டுப் போகாதவை.

Thursday, March 04, 2010

உழைக்கும் வர்க்கத்தின் நண்பன்

டொமினிக் ஜீவா (மல்லிகை ஆசிரியர்)


நண்பன் டானியல் அன்ரனி பிறந்தது நாவாந்துறைப் பிரதேசம். ஒரு சாதாரண உழைப் பாளர் குடும்பத்தில் உதித்தவர் அவர். அந்தப் பிரதேசம் தொழில் சார்ந்த உடலுழைப் புக் கொண்ட மக்கள் அதிகமாக வாழும் பகுதியாகும்.
இவர் இந்தப் பிரதேசத்தில் மூன்று தளங்களில் நின்று தனது செயல்பாட்டை தொடாந்து நடத்தி வந்தார். ஒரு தளம் சமூக முன்னேற்றம். இன்னொரு தளம் விளையாட்டுத் துறை. பிறிதொரு தளம் இலக்கியக் களம். இவை மூன்றையும் தனது ஆளுமையைக் கொண்டு செழுமைப்படுத்தி வந்துள்ளார்.
இலக்கியப் பாதையை இவர் தெளிவாகவே தேர்ந்தெடுத்துக் கொண்டார். எதிர்கால இலக் கியப் போக்கு உழைப்பாளி மக்களின் இதயக் குரலை எதிரொலிக்க வேண்டும். அதுதான் நிலையான ஆக்க இலக்கியக் கோட்பாடாக அமையும் எனத் திட்டமாகவே நம்பி, கடைசி வரையும் அதன் ஊடாகவே செயற்பட்டு வந்துள்ளார்.
தான் பிறந்து வளர்ந்த நாவாந்துறையையும் அங்கு உழைத்து வாழும் மக்களையும் அவர் மறக்கவேயில்லை. கடைசி வரையும் நேசித்தார். தனது படைப்புக்களில் கூட,அந்தப் பிர தேசத்தில் வாழும் மக்களின் வாழ்க்கை அபிலாஷைகளைத் தான் அடிச்சாரமாகக் கொண்டு படைத்தார். அந்தப் பிரதேசத்து மக்களின் வாழ்க்கைச் சிரமங்களை,கஷ்டங்களை, முர ண்பாடுகளை முன்நிறுத்தி,அவர் சிருஷ்டித்த இலக்கியங்கள் நூலுருப் பெற்றுத் திகழ்கின்றன.
ஓயாமல் உழைத்தவர் அவர் தனது பிரதேசத்து மக்களின் சிரமங்களைக் குறைக்க இடை விடாது பாடுபட்டவர். இளைஞர்கள் ஒன்று சேர்ந்து நாவாந்துறையை முன்னேற்ற வேண் டும் என அடிகடி கூறிவந்த இவர் அதற்கு முன் உதாரணமாக தானே முன்நின்று உழை த்து வழிகாட்டியவர். உழைப்பவர்கள் உணர்ந்து முன்னேற வேண்டும் என்பதே இவரது இதய தாகமாகும்.
படைப்பாளியாக இருந்த இவர் காலக்கிரமத்தில் ஒரு சஞ்சிகையின் ஆசிரியராகவும் பரிண மித்தார். “சமர்” என்ற சஞ்சிகையை இவர் ஆரம்பித்து நடத்திய போது தான் பலர் இவரை ஆச்சரியம் கலந்த பார்வையுடன் திரும்பிப் பார்க்கத் தொடங்கினர். சொற்ப காலம் தான் “சமர்” சிற்றிலக்கிய ஏடு வெளிவந்தது. அந்த சொற்ப காலத்துக்குள்ளேயே “சமரின்” இல க்கிய வீச்சுப் பலரால் பின்னர் வியந்து பேசப்பட்டதாகும். “சமரின்” இலக்கியப் பார்வை ஒரு புதிய பரபரப்பையே இந்த மண்ணில் ஏற்படுத்தி விட்டது. தரமான இலக்கிய விமர்சகர்கள், எழுத்தாளர்கள் எல்லோரும்”சமரில்” தமது எழுத்துக்களைப் பதிய வைத்துள்ளனர்.
டானியல் அன்ரனி தோழமையுடன் பழகத்தக்கவர். அதிலும் எழுத்தாளர் என்றாலே இவரது பழகும் தன்மை கனிவு நிறைந்தவையாக அமையும். கடைசி வரையும் மக்கள் தொண்ட னாகவே வாழ்ந்து மறைந்தவர் இவர். இவரிடம் ஒளிவு மறைவு என்பதே கிடையாது. மன சில் பட்டதை வெகு இயல்பாக வெளியே சொல்லிவிடும் தன்மை நிறைந்த இவரிடம் தெ ளிவான கருத்து நிலை இருந்தது. அந்தக் கருத்து நிலை இவரது படைப்புக்களில் வெகு வாகத் தெரிந்தது.
இவரது படைப்புக்களில் ஒரேயொரு நூல் தான் வெளிவந்துள்ளது. இவரது முழு ஆளு மையையும் நாம் புரிந்து கொள்வதற்கு இது மாத்திரம் போதாது. அவரது சிருஷ்டிகள் முழுவதும் நூலுருப் பெறும் போது தான் டானியல் அன்ரனியின் முழுக்கருத்து ஆளுமையும் உழைக்கும் மக்களுக்குப் புரியும்.

இரு துருவங்கள்! அ.யேசுராசா

(1974 மார்கழி)
அப்போது நான் பேராதனையில் கடமையாற்றிக் கொண்டிருந்தேன். தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் என்ற எனது சிறுகதைத் தொகுப்பின் வெளியீட்டு விழாவை, எனது சொந்த ஊரான குருநகரில் நடாத்த ஒழுங்குகள் செய்து கொண்டிருந்தேன். எனது வயதை ஒத்த எனது கலை இலய்கியங்களுடன் முரண்படும் அணியைச் சோ.ந்த- இளந்தலைமுறை இலக்கியவாதி ஒருவரும் அவ்விழாவில் நூல் விமர்சனம் செய்ய வேண்டுமென்பது எனது எண்ணம். எனவே யாழ்ப்பாண நண்பர்களுடன் தொடர்பு கொண்டேன். ஒரு பிரச்சாரப் பீர ங்கி எனக் குறிப்பிட்டு, டானியல் அன்ரனியையே பலரும் சிபார்சு செய்தனா.. நண்பா.கள் மூலம் அவரை அக்கூட்டத்தில் பேச ஒழுங்கு செய்தேன்.
நான் கல்வி கற்ற சென் ஜேம்ஸ் பாடசாலையில் வெளியீட்டு விழா மிக எளிமையான முறையில் நடைபெற்றது. கவிஞர். மு.பொன்னம்பலம் தலைமை தாங்க குப்பிளான் ஐ.சண்முகன், மு.புஸ்பராஜன் ஆகியோர் உரையாற்றினா.. டானியல் அன்ரனி காரசாரமாக நூலை விமர்சித்தார். அன்று தான் அவருடன் எனது முதற் சந்திப்பு, அதன் பின் அவருடன் நல்ல பழக்கம் ஏற்பட்டது.
1976ல் நான் இடமாற்றம் பெற்று யாழ்ப்பாணம் வந்த பின்னர். அடிக்கடி அவரைச் சந்திக்க முடிந்தது. நான் கடமையாற்றிய சுண்டுக்குளி அஞ்சலகத்துக்கும் இடையிடையே அவர் வருவார். கலை, இலக்கியம், அரசியல் எனப் பல விடயங்களைப் பற்றியும் கதைத்துக் கொள்வோம்.
அன்ரனியின் பல கருத்துக்களுடனும் எனக்கு உடன்பாடு இருக்கவில்லை. இந்த முரண்பாடுகள் அன்று எமது நட்பைப் பாதிக்கவுமில்லை. சில நண்பர்கள் இணைந்து “அலை” என்ற இரு திங்கள் ஏட்டை 1975 கார்த்திகையிலிருந்து நடத்திக் கொண்டிருந்தோம். 1979 சித்திரையிலிருந்து “சமர்.” என்ற ஏட்டை அன்ரனி வெளியிடத் தொடங்கினார். இவ்விரு ஏடுகளும் கருத்து நிலையில் இருதுருவங்களாக இருந்தன. கலை, இலக்கியச் செயற்பாடுகளி லுள்ள முரண்பாடுகள் கூர்மையடைந்த சூழலில், எம்மிருவடையிலான தொடர்பு அறுந்து போயிற்று. கருத்து முரண்பாடு உள்ளவர்கள் நேரில் வெளிப்படையாகக் கதைத்து- உறவு களைப் பேணும் சூழலை கலை தான் பொறுப்பேற்க வேண்டும்.
டானியல் அன்ரனியைப் பற்றி நினைக்கையில் இருவிடயங்கள் தூக்கலாக எனக்கு நினைவுக்கு வருகின்றன.
முதலாவது யாழ்ப்பாணத்தில் ஓரளவு பின்தங்கிய பகுதிகளாகச் சொல்லப்படும் கரயோரப் பகுதியைச் சேர்ந்த ஓர் ஊரிற்கு- நாவாந்துறைக்கு- தனது “சமர்” இதழ் வெளியீடு மூலமும், ஏனைய கலை இலக்கிய செயற்பாடுகள் மூலமும் சிறப்பு அடையாளத்தைப் பெற்றுக் கொடுத்தார். (குருநகரிலிருந்து அலை வருகிறதா! என வியப்புடன் பலர். கேட்ட அனுபவம் எமக்கு முண்டு. குருநகரும் இக்கடலோரப் பகுதியைச் சேர்ந்ததே).
இரண்டாவது, இலக்கியக் கூட்டங்களிலும்,கருத்தரங்குகளிலும் துணிவாகக் கருத்துக்களை வெளிப்படுத்தும் அவரது தன்மை, அபிப்பிராயம் சொல்ல வேண்டிய இடங்களில் மௌனப் பண்பாட்டைப் பேணிய இலக்கிய உலகில், இது கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய முக் கிய செயற்பாடேயாகும்.
குறைந்த வயதில்- எதிர்பாரா முறையில்- அன்ரனி மரணமடைந்தது, பலரைப் போல் எனக் கும் அதிர்ச்சியை தந்தது. அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆறுதல் வார்த்தைகள்.